Wednesday, September 26, 2012

பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்.

பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்.

1.கண்ணில் இராசயணப் பொருள்கள்,கழுவும் இராசயணப் பொருட்கள் படும் போது என்ன செய்வீர்கள்?
1.
கண்களை எக்காரணம் கொண்டும் அழுத்தவோ தேய்க்கவோ கூடாது.பட்ட பொருட்கள் நன்றாக கழுவி செல்ல,நல்ல இளவெப்ப தண்ணீரில்,lukewater, கழுவுங்கள்.தலையை சரிவாக வைத்து ஓடும் தண்ணீரால் கண்ணை திறந்து வைத்த வண்ணம் கழுவுங்கள்.மெதுவாக நெற்றியில் இருந்து தண்ணீரை பாய விடுவதன் மூலம் இராசயணப் பொருட்களை கழுவலாம்.தண்ணிரைத் தவிர வேறு எதையும் பாவிக்காது,கைகளையும் நன்றாக கழுவிய பின் இவற்றை செய்வது சிறந்தது. முடிந்தால் சன் கிளாஸ் மூலம் அல்லது வெளிச்சம் படாது கண்களைப் பாதுகாப்பாக மறைத்து, மருத்துவரிடம் செல்லலாம்.

2.
தூரப்பார்வை,கிட்டப்பார்வை,மாலைகண்,நிறப்பார்வையின்மை என்ன தெரியுமா?
2.
தூரப்பார்வை -Hyperopia, farsightedness, longsightedness or hypermetropia என்பர்.குவிவில்லையைப் (convex lenses,)பாவிப்பர். லாசர் முறையில் குணப்படுத்த முடியும்.
கிட்டப்பார்வை..nearsightedness (அமெரிக்கன்)shortsightedness (பிரிட்டிஷ்)--பொதுவாக Myopia. உட்குவிந்த வில்லைகளைப் Concave lenses பாவிப்பர்.லாசர் முறையில் குணப்படுத்தவும் முடியும்.
நிறக்குருடு Colour blindness நிறங்களைப் பார்க்க முடியாதிருப்பது.அதே சமயம் இரவு நேரங்களில் பார்வை நன்றாக இருக்கும் என்பதால் போரின் போது இரவு நேர உளவு வேலைகளுக்கு இவர்களைப் பாவிக்கிறார்கள். மிருகங்களுக்கும் நிறங்களைப் பார்க்க முடியாது.
மாலைக்கண்-Nyctalopia - Night Blindness வெளிச்சம் இல்லாத நேரங்களில் பார்வை இல்லாமல் இருப்பதாகும்.
பார்வையற்றவர்கள்- இவர்களுக்கு பொதுவாக கேட்பதும் தொட்டறிவதும் சிறப்பாக இருக்கும்.பிரெயிலி முறையில் படிக்க முடியும்.

3.
வெள்ளை,பிரவுண் சர்க்கரை(white and brown sugar) எது சிறந்தது?
3.
இரண்டிலும் அதிக வேறுபாடு கிடையாது.ஒரே அளவான கலோரிகளே உண்டு.அரிசியில் உள்ள தவிடு போல் சிலர் நினைத்தாலும்,கரும்புக் கழிவு(molasses) காரணமாகவே இந்த நிறம் ஏற்படுகிறது.மிக சிறிய அளவில் சில கனிமப்பொருள்(மினரல்) இருப்பதுடன் ருசியில் சிறிது வேறுபடுகிறது.அவ்வளவுதான்.

4.
எலும்புப்புரை (Osteoporosis) என்பது என்ன?
4.
எலும்புப்புரை என்ற ஒஸ்டியொபொறோசிஸ் என்பது எலும்பு முறிவு ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தப்பட்ட நோய்.இது பொதுவாக பெண்களில் அரைவாசிப் பேருக்கும் ,ஆண்களில்,அநேகமாக 50 வயதிற்கு மேல் கால்வாசிப் பேருக்கும் வருகிறது.வைட்டமின் K,B12,D கல்சியம் குறைபாட்டினால் வருகிறது.

5.Acne
என்பது என்ன?
5.Acne
என்பது முகப்பருவின்,pimples, சிறிது அதிக நிலையாகும்.பொதுவாக இளையவர்களுக்கு வருகிறது.சரியான காரணம் காணப்படாத இது, முகத்தில்,குழிகளையும்,தோலின் நிறத்தையும் மாற்றி விடுகிறது.ஹார்மோன் மாற்றம், கர்ப்பகாலம்,சேபம்(sebum) எனப்படும் எண்ணைப் பொருள் சருமத்தில் அழியும் செல்களை வெளிக் கொணருகிறது.இது காய்ந்து அடைபட்டுப் போவதால் முகப்பருக்கள் வருகின்றன.அதனால் அடிக்கடி தண்ணீரினால் கழுவுவது சிறந்தது. தொடர்ந்து முகத்தில் குழிகள்,நிறமாற்றம் ஏற்பட்டு acne,என்ற நிலைக்கு செல்கிறது.தற்போது,UCLA and the University of Pittsburgh, நமது உடம்பில் உள்ள சாதுவான பக்ரீயாக்களை வைத்து முகப்பரு,acne, சுலபமாக குணப்படுத்த முடியும் என்று கண்டுள்ளனர்.இனி முகப்பருவுக்கு Goodbye தான்.அதே சமயம், University of California and the vaccine company Sanofi-Pasteur ,தடுப்பு ஊசி ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.

6.
முடிஉதிர்வு காரணம் என்ன?
6.
தினமும் 100-150 வரையிலான முடி உதிர்வு அனைவருக்கும் ஏற்பட்டு சில புதியவை உருவாகின்றன. ஆண்களுக்கு ஏற்படுவது, நீரிழிவு,புற்று நோய் ,புரதக் குறைவு,சில மருந்துக்கள்,தைரொயிட்,அதிக வைட்டமின் ஏ,குறைவான இரும்புச்சத்து,,தலைக்கு கிடைக்காத பயிற்சி போன்றவை காரணமாகும்.
பொதுவாக ஆண்களுக்கு ஏற்படுவதை,baldness,என்று சொல்வார்கள்.இதற்கு சில மருந்துகள், தெளிப்பு,ஸ்பிறே,ஹார்மோன்கள் பாவனையில் உள்ளன.தவிர நவீன அறிவியலில் முடி நடுவது,மற்றும் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஹர்மோன்கள்,மற்றும் சில மருந்துகள்(Minoxidil-Rogaine,Finasteride-Propecia -இவை இன்னமும் சரியாக நிரூபிக்கப்படவில்லை) பயன்படுத்தப்படுகிறது. இவை ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதால்,டெமட்டொலொகிஸ்ட் ஐ கலந்தாலோசித்தால் அதிக பலன் உண்டு.
பெண்களுக்கு உணவு வகையாலும் சில ஹார்மோன்கள் எடுப்பதாலும்(Minoxidil-Rogaine -இவை இன்னமும் சரியாக நிரூபிக்கப்படவில்லை) சரி செய்யப்படுகிறது.தலையை இறுக்கமாக கட்டுவது,பயிற்சி இல்லாத முடி,தைரொயிட்,சில மருந்துக்களின் தாக்கம்,45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்,இரத்தப் போக்கு,ஒழுங்கற்ற மாதவிடாய்,பருவ மாற்றம்,மனஅழுத்தம் இப்படி பல காரணங்களை சொல்லலாம்.சிலருக்கு தொகுதி தொகுதியாக அப்படியே கையோடு வந்துவிடும்(alopecia). ஒருவரின் உடல் சமூக நிலையை கொண்டே பாதுகாப்பது, தடுப்பது, வளர செய்வது தங்கி உள்ளது. Marilyn Sherlock, chairman of the Institute of Trichologists முடி மூன்று விதமாக(anagen, catagen, and telogen ) வளருகிறது.பொதுவாக முடியின் ஆயுள்காலம் மூன்று வருடங்கள்.

7.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) என்பது என்ன?
7.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) என்பது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுவதனால்,நெஞ்செரிவு,குமட்டல்,அதிக உமிழ் நீர் சுரத்தல் போன்றவை.அமிலத் தன்மையுடைய உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.இது ஒரு நீண்டகால நோயென்பதால் உரிய நேரத்தில் கவனியாது விடின் புற்றையும் ஏற்படுத்தலாம்.endoscopy, biopsy, X-ray போன்ற முறைகளால் கண்டறியப்படுகிறது.

8.
உடலில் தண்ணீரின் அளவு என்ன?
8. 66%
தண்ணீர்

9.
உங்கள் கட்டை விரலும்,மூக்கும் ஒரே அளவானவை.சரியா?
9.
ஆமாம் ஒரே அளவுதான்.அளந்து பாருங்கள்.

10.நீங்களும் உங்கள் வயதும் ஒன்றா?
10.
நமது உடலின் பாகங்கள் பாம்பு தன் தோலை உரித்து புதுபித்துக் கொள்வது போல், புதிப்பிக்கப்படுகின்றன. மூளையையும்,கண்களையும் தவிர சரும கலங்கள்,14 நாட்களில் புதுப்பிக்கப்படுவது போல், மற்றைய பாகங்கள் புதிப்பிக்கப்படுகின்றன. நெஞ்செலும்புக் கூடு,அதாவது எலும்பு கலன்கள், 10-12 வருடங்களுக்கு ஒரு முறையும்,சிவப்பணுக்கள் 120 நாட்களும்,ஈரல் 300-500 நாட்களும், இப்படி வேறுபடுகின்றன.ஆனால் DNA மாற்றம் பெறுவதில்லை.இப்போ உங்கள் வயதும் நீங்களும் ஒன்றாக முடியுமா?

11.
வியர்வைக்கு மணம் உண்டா?
11.
கிடையாது.பக்டீரியாக்கள் காறணமாகவே மணம் ஏற்படுகிறது.

12.
வியர்வை எதற்காக ஏற்படுகிறது?
12.
யுரியா,அமோனியாவை வெளியேற்றவும்,உடல் உஸ்னத்தை சரிப்படுத்தவும்,உடலில் 2-4 மில்லியன் வியர்வை துவாரங்கள் உண்டு.

13.
நமது உடம்பிற்கு தேவையான விட்டமின்கள் எத்தனை?
13.
நமது உடலுக்கு 13 முக்கிய வைட்டமின் கள் தேவைப்படுகிறது. A,C,D,E,K, B -B1 (thiamine), B2 (riboflavin), B3 (niacin), vitamin B-6, vitamin B-12, and folate. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது.D யின் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது.

14.
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் எது, எவ்வளவை உடல் பெறுகிறது?
14.
வைட்டமின் D ,80-90 %

15.
ஏன் பறக்கும் விமானத்தில் யன்னல்களை திறக்க முடியாதபடி செய்துள்ளனர்?
15.
நிலத்தில் புவிஈர்ப்பும்,காற்றின் மூலக்கூறும்,air molecules concentrated , செறிவுடையதாக இருக்கும்.மேலே போகப் போக காற்றின் அடர்த்தி குறைவடைவதால்,hypoxia, or lack of oxygen(பிராணவாயுக் குறைவு) பயணிகள் பாதிக்கப்படுவர். மேலே காற்றின் அழுத்தம் குறையும் போது, குளிரான நிலையை அடைவார்கள்.3000 மீ.மேலே 11000 மீ வரை நிலையில் வெப்ப நிலை மைனஸ் 51 பாகை செல்சியுஸ் அளவிற்கு செல்லுமாதலால், இறந்துவிடக் கூடிய ஆபத்து உண்டு.இதைவிட வெப்பம் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு செல்கிறது.(காப்பி ஆறுவது போல்) அதாவது, வெளியே குளிர்,உள்ளே சூடு,வெளியே உள்ள வெப்ப நிலையை சமப்படுத்த உள்ளே இருந்து வெளியே செல்லும் போது,அதை நிரப்ப வேகமாக உள்ளே நுழையும் காற்று,உள்ளே இருக்கும் விசைச் சுழலி இவையின் தாக்கம், எவருமே உயிருடன் இருக்க முடியாது. யன்னலை திறக்கலாமா?

சக்தி.

http://www.usetamil.com/t27479-3#43010


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: