Sunday, March 31, 2013

உங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆசையா

உங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆசையா?

குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது என்று சித்த மருத்துவர் வேலாயுதம் கூறுகிறார். 

மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது என்றும் கூறுகிறார்.

இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.

ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.

1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

 

2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும்.

 

3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

 

4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.

 

5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும்.

 

6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள்

http://www.tamilkathir.com/news/6912/58//d,full_article.aspx



--
*more articles click*
www.sahabudeen.com


வீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்!

வீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்!

வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.

சுத்தமான வீடு

வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.

மனம் கவர்ந்த இயற்கை காட்சிகள்

சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம்.

குரோட்டன்ஸ் செடிகள்

வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.

மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும்.

எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.

அழகான பர்னிச்சர்கள்

வரவேற்பரையில் எதிரெதிராய் பெரிய சோபாக்களைப் போட்டு வடகிழக்கு மூலையில் சின்னதாய் பவுண்டென் வைத்தால் அழகு அள்ளிக்கொண்டு போகும்.

பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் , இந்த காலத்தின் மாடர்ன் ஆர்ட்களையும் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=169&t=39988



--
*more articles click*
www.sahabudeen.com


நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்!

நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்!

நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்காக அதன் அடையாளமாகக் கொடுப்பதே அன்பளிப்பாகும்..! உங்கள் அன்பளிப்பு உன்னதமாக நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்...
அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்துகொள்வதால் மகிழ்ச்சி பெருகும். ஒருவரை முக மலர்ச்சியோடு உபசரிப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், தட்டிக்கொடுத்தல் மூலமும் அன்பை பகிர்ந்துகொள்வது உண்டு.
பேச்சு, செயல், பார்வை ஆகிய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக்குரியவர்களுக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது. உண்மையான அன்போடு நாம் மற்றொருவருக்கு ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் அதுதான் அன்பளிப்பு ஆகும்.
மெய்யான அன்பைக் காட்டுவதற்கு நாளும் தேவையில்லை, சமயமும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். ஒரு காதலன் தன் காதலிக்கு சிறு சிறு பரிசுகளை வழங்குவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. அதேபோல கணவன் தன் மனைவிக்கு சில அன்புப் பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் காதலன்-காதலி, கணவன்-மனைவி இவர்களைத் தவிர உறவினர் மற்றும் நண்பர்களை பொறுத்தவரை அன்பளிப்பு கொடுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், விழா நாள் போன்ற விசேஷமான காரணம் ஏதாவது இருந்தால் தான் அன்பளிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள்.
இப்படி அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எத்தனையோ வாய்ப்புகளும், நாட்களும் வரத்தான் செய்கின்றன. அவ்வாறு வரும் ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் என்னென்ன பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று இனி பார்க்கலாம்.
நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு அடையாளமாக கொடுப்பதே அன்பளிப்பாகும். அப்படிப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் எவை? என்ற கேள்விக்கு விடை அளிப்பது கடினமான விஷயம்தான். ஏனென்றால் இன்னென்ன பொருட்களைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. எனவே, நாம் பொதுவாக அன்பளிப்புக்குரிய சில பொருட்களை பட்டியலிட்டுக் கூறலாமே தவிர, இவை மட்டும் தான் அன்பளிப்புக்கு உரிய பொருட்கள் என்று கூற முடியாது.
ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதன் நோக்கம் என்ன? அவரை மகிழ்விப்பதற்காகத்தான். எனவே ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு என்ன மாதிரி பொருளில் விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டு, அவருக்குப் பிடித்தமான பொருளை வாங்கி அன்பளிப்புச் செய்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அன்பளிப்பு பொருட்களில் பரவலாக இடம் பெறத்தக்கவை வருமாறு: 
பேனா செட்: 
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் முதல், அலுவலகப் பணியாளர், தொழிலாளி, முதலாளி, தொழிலதிபர், வியாபாரி வரை எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று பேனா ஆகும். யாருக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்து, அவருக்கு எப்படிப்பட்ட பேனாவை பரிசளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்வது நல்லது.
கைக்கடிகாரம்: 
படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா வயதினரும் விரும்பி ஏற்கும் ஒரு பொருள் கடிகாரம் ஆகும். கைக்கடிகாரத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி டிசைன்களில் கடிகாரங்கள் உள்ளன. உள்நாட்டுக் கடிகாரங்களோடு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடிகாரங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று வகைவகையான கடிகாரங்கள் உள்ளன. பேனாக்களைப் போலவே கடிகாரங்களைப் பரிசளிக்கும் போதும், யாருக்கு எது பயன்படும் என்பதையும், யாருக்கு எது விருப்பம் என்பதையும் கவனித்து, கருத்தில் கொண்டு பரிசளிக்க வேண்டும்.
சுவர்க் கடிகாரம்: 
இந்தப் பட்டியலில் டைம்பீஸ் என்னும் கடிகாரமும், சுவர்க் கடிகாரமும் அடங்கும். புதுமனை புகுவிழா போன்ற சமயங்களில் பரிசளிக்க ஏற்றவை சுவர்க் கடிகாரங்கள். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அலாரம் வைக்கும் அமைப்பைக் கொண்ட டைம்பீஸ்கள் பயனுள்ளதாக அமையும். அவர்களுக்கு டைம்பீஸ்களை பரிசளித்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தப் பொருட்கள் இருப்பவர்களுக்கு இவற்றை வாங்கிப் பரிசளிப்பது தேவையற்றது. எனவே கடிகாரங்களைப் பரிசளிப்பதற்கு முன்னர் இந்த விஷயத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.
கூலிங் கிளாஸ்: 
அன்பளிப்புக்கு ஏற்ற பொருட்களில் மூக்குக் கண்ணாடியும் ஒன்று. கண் குளுமைக்காகவும், தூசு, துரும்புகள் கண்ணில் படாமல் பாதுகாக்கவும், சூரிய வெப்பம் கண்களைத் தாக்காமல் காக்கவும் இவற்றை பெரும்பாலானவர்கள் அணிந்துகொள்கிறார்கள். கண்ணாடிகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறவர்கள், அவற்றை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்களுடைய முக அமைப்புக்கும், அளவுக்கும், ஏற்றதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் பார்த்து வாங்கிப் பரிசளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகங்கள்: 
திருமணங்களின் போதும், சாதனை நிகழ்த்தும் மாணவ மாணவியரைப் பாராட்டும் போதும் பரிசளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள் நல்ல தரமான நூல்களாகும். மாணவர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தை விளக்கும் நூல்களும், விஞ்ஞானம், வரலாறு, விளையாட்டு மற்றும் சாதனை நூல்களும் பரிசளிக்கலாம். முதியவர்களுக்கு இதிகாசம், புராணம், இலக்கியம், வரலாற்று நூல்களையும், பெண்களுக்கு அழகுக் குறிப்புகள், சமையற்கலை, குழந்தை வளர்ப்பு போன்ற நூல்களையும் பரிசளிக்கலாம்.
ஆடை, அணிகள், சால்வைகள்: 
அரசியல் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் சால்வைகளும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆடைகளையும் வாங்கி வந்து அன்பளிப்பு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தை தொடரலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அகமகிழ்வார்கள்.
பொம்மைகள்: 
பொம்மைகளைப் போலக் குழந்தைகளை மகிழ்விக்கும் அன்பளிப்புகள் வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக்களில் பொம்மைகளைப் பரிசளிப்பது மிகவும் புத்திசாலித்தனம் ஆகும்.
வீட்டு உபயோகப் பொருட்கள்: 
டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை திருமணம், புதுமனை புகுவிழா போன்றவைகளுக்கு அன்பளிப்புச் செய்யலாம்.
காமிராக்கள், கால்குலேட்டர்கள்: 
சாதனைகள் புரியும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் காமிராக்களையும், கால்குலேட்டர்களையும் அன்பளிப்பு செய்யலாம்.
வாழ்த்து அட்டைகள்: 
பண்டிகைகள், விழாக்கள் போன்றவைகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம்.
கலைப் பொருட்கள்: 
காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொருட்களை வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத்தமானதாகும்.
செலவில்லாத அன்பளிப்பு: 
அன்பளிப்புகள் எல்லாமே காசு கொடுத்து வாங்குவது தான் என்று அர்த்தமில்லை. யாருக்கு எது பிடிக்குமோ, யாருக்கு எது தேவையோ, அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதுதான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை ஆகும். புன்னகையை கொடுங்கள், புன்னகையோடு வாழுங்கள். இந்தக் கொள்கையை மறக்காமல் கடைப்பிடித்தால் நமக்குத் தெரிந்தவர்களிடமும், உறவினர் மற்றும் நண்பர்களிடமும் நல்லவர் என்ற பெயர் எடுப்பது மிக சுலபம். இந்த சுலபமான வழி இருக்கும்போது, அன்பளிப்பு கொடுக்க யோசிக்க வேண்டுமா என்ன?


http://pettagum.blogspot.in/2012/05/blog-post_9844.html



--
*more articles click*
www.sahabudeen.com


தெரிந்து கொள்வோம் வாங்க-45

தெரிந்து கொள்வோம் வாங்க-45

*வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
 
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..
 
புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
 
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
 
தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
 
கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த
முடியும்.
 
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
 
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
 
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
 
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
 
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
 
எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
 
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.
 
சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும்
மீண்டும் கட்டப்படும்.
 
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டகச் சிவிங்கி மட்டும் தான் வலது, வலது, இடது, இடது
என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
 
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
 
பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம்
புன்னகையைக்
குறிக்கும்.
 
நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை
அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.
 
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும்
செய்வார்.
 
15 எழுத்து ஆங்கில வார்த்தை, ஒருமுறை வந்த எழுத்து திரும்ப வராத வார்த்தை:
uncopyrightable
 
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6
வயதில் தான் வளர்கிறது.
 
வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.
 
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
 
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ்
எனப்படும்.
 
*நன்றி *
*(தமிழச்சி from facebook)*
Engr.Sulthan



--
*more articles click*
www.sahabudeen.com


தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!

தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!

கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா?

பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது.சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்.

புற்றுநோய்: மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

கண்கள்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

கொலஸ்ட்ரால்: மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு: மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

முகப்பரு: மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

பாலுணர்வு: பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

ஆரோக்கிய இதயம்: மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

நன்றி: http://tamil.boldsky.com



--
*more articles click*
www.sahabudeen.com


Friday, March 29, 2013

மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி?

மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க

மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

http://www.youththamizha.com/?p=245



--
*more articles click*
www.sahabudeen.com


தெரிந்து கொள்வோம் வாங்க-44

தெரிந்து கொள்வோம் வாங்க-44

* உலகின் எல்லா பகுதிகளிலும் மேலிருந்து கீழே குதிக்கும் போது, இடப்பக்கமாகத்தான் சற்றே விலகி விழுகிறார்கள். காரணம், சூரியனை இட, வலமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தப் பக்கம்தான் அழுத்தம் அதிகம். நீச்சல் வீரர்கள், பாராசூட் வீரர்கள் என அனைவரும் இதனால்தான் இடது பக்கமாகவே படு இயல்பாக குதிக்கிறார்கள்.

* உலகிலேயே முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கேயி. 1953-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய மிக வயதான பெண்மணி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தமேவர்தனாவே என்பவர். 2002 மே 16-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அவருக்கு வயது 64.

* நாணயங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.

* இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டிலிருந்து நாணயம் புழக்கத்தில் உள்ளது.

* இன்றும் தங்க நாணயங்கள் ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

* ரஷியாவில் பண்டையக் காலத்தில் சுவரொட்டி அளவு ரூபாய் புழக்கத்தில் இருந்தது.

* அல்பட்ராஸ் என்னும் வெண்ணிறக் கடற் பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டைதான் இடுகிறது.

* கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் இடும்.

* ஸ்டிக்கிள் பாக் என்ற மீன் கடற் தாவரங்களைக் கொண்டு கடலின் அடியில் கூடு கட்டி வாழும்.

* அட்லாண்டிக்கின் ஒரு பகுதியான ஸர்காúô கடல் உலகிலேயே மிக ஆழமானது. சில இடங்களில் அதன் ஆழம் 19,680 அடிகளாகும்.

* ரஷியாவில் உள்ள அஜாவ் என்ற கடல்தான் ஆழமற்றது. இதன் அதிகபட்ச ஆழமே 42.64 அடி தான்.

* நேபாளத்தின் தேசிய விலங்கு பசு.

* பால் பாயின்ட் பேனாவைக் கண்டறிந்தவர் ஜான்டி லார்டு.

* ஒரு சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம்.

* உலகின் மிகப் பெரிய விமானம் போயிங்-747 ரக விமானம் ஆகும்.

* கறுப்பு நிறக் கொடி துக்கம் மற்றும் எதிர்ப்பை உணர்த்துகிறது.

* இந்திய ரயில்வே 1853-ம் ஆண்டு மும்பையிலிருந்து, தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூர முதல் பயணத்தை துவக்கியது. இன்று உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் மொத்த ரயில் பாதை நீளம் 63,028 கி.மீ. பணியாளர்களின் எண்ணிக்கை 1.54 மில்லியன்.

* தமிழ்நாடு நிலப்பரப்பில் 7-வது இடத்தையும், மக்கள் தொகையில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

* தமிழகத்தில் படிப்பறிவு விகிதம் 73.47%.

* இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்க்கண்ட். இது 2000-ம் ஆண்டில் உதயமானது.

* இந்திய யூனியன் பிரதேசங்களில் மிகப் பெரியது அந்தமான் நிகோபார் தீவுகள். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட நீதித்துறைச் சார்ந்த பிரச்சினைகளுக்கு கோல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* லட்சத் தீவின் பரப்பளவு 32 சதுர கி.மீட்டர். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கேரளா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.

*நிலவை விட சூரியன் பல மடங்கு பெரியது நமக்குத் தெரிந்தது தான். ஆனாலும் புவியிலிருந்து பார்க்கும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவாகத் தெரிவது ஏன் தெரியுமா?

நிலவின் விட்டத்தை போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. அதேபோல், புவியிலிருந்து நிலா உள்ள தொலைவை போல் புவியிலிருந்து சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளதே காரணம் ஆகும்.

* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.

*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.

முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.

* யானையால் தாண்ட முடியாது.

* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.

* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.

* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.

* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.

* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

 தகவல்:யாழ் இணையம்

Engr.Sulthan



--
*more articles click*
www.sahabudeen.com