Sunday, March 30, 2014

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி 2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1-
ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
~
ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
~ ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
~ மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
~ உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
~
ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
~
ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
~
அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம் உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம் 
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, March 29, 2014

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன? ---

கைது செய்வது எப்படி?

வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமைபெற்று விடுகிறது. இது போன்ற சமயங்களில், அந்த நபரைத் தொடுவதோ, உடம்பைச் சுற்றிப் பிடித்துக் கொள்வதோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒரு நபரைச் சூழ்ந்து கொண்டு நிற்பது மட்டும் கைது செய்யப்பட்டதாக ஆகாது. (குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 46)

கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்?

கைது செய்வதை நீங்கள் பலவந்தமாகத் தடுத்தால், கைது செய்வதற்குத் தேவையான அனைத்தையும் காவல்துறை அதிகாரி பயன்படுத்தலாம். (பிரிவு – 46) மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால், அந்த நபரின் உயிரையும் பறிக்கலாம். ஆனாலும் கைது செய்வதற்கு வேண்டிய அளவுக்கு மீறி பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை அவர் நியாயப்படுத்த முடியாது (பிரிவு – 46). எனவே தேவைப்படாத நிலையில் தேவையற்ற கட்டுப்பாடு அல்லது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துதல், கால் களையும் கைகளையும் கட்டி வைத்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை.

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?

உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50).

பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 75).

உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22)

24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் 22)

25 பிணையில் விடுவிக்கப்படக் கூடியவரா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50)

விலங்கிடலாமா?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்புடையவராகவோ அல்லது தப்பி ஓட முயற்சிப்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பவராகவோ இருந்தாலன்றி, கைது செய்யப்பட்ட நபருக்கு விலங்கிடக் கூடாது. கைது என்பது தண்டனையல்ல. எனவே, தேவைப்படாத நிலையில், தேவையற்ற கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

http://pettagum.blogspot.in/2013/01/blog-post_7488.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்

'பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்' என சில வாரங்களுக்கு முன் சொன்னேன்.

எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள்.

நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள். அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.

இதன்போது அவர் உங்கள் நாடித்துடிப்பை தனது விரல்களால் நாடிபிடித்துப் பாரப்பார். இப்படிப் பார்ப்பது இரண்டு காரணங்களுக்காகவாகும்.

முதலாவதாக, நாடித்துடிப்பின் வேகம், அளவு, அதன் ஒழுங்குமுறை போன்றவற்றை அவதானிப்பார். இரண்டாவதாக அதில் இரத்த ஓட்டம் தடைப்படுவதையும், மீண்டும் வருவதையும் அவதானிப்பதன் மூலம் உங்கள் பிரசரின் உயர்அளவு (Systalic pressure) பற்றிய மதிப்பீட்டைச் செய்வார்.

பின் ஸ்டெதஸ்கோப்பை உங்கள் முழங்கையின் உட்பகுதியில் வைப்பார்கள்.

நாடித்துடிப்பு தடைப்படுவதையும் அது மீள வருவதையும் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்டு அறிவதன் மூலம் பிரஸரின் உயர்அளவு (Systalic pressure), மற்றும் தாழ்அளவு (Diastolic pressure) இரண்டையும் துலக்கமாக அளந்து அறிவார்கள்.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

உங்கள் பிரஸர் அளவிடப்படுவதற்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

  • உங்கள் மேலாடை நீளக்கையுடனாக அல்லாமல் அரைக்கையுடன் இருந்தால் Cuff யை சுற்றுவதும், ஸ்டெதஸ்கோப்பால் நாடித்துடிப்பின் ஒலிகளை துல்லியமாகக் கேட்டு பிரஷரை அளவிடுவதும் சுலபமாக இருக்கும்.
  • பிரஸர் அளவிடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிட நேரத்தினுள் கோப்பி அருந்துவதையும், புகைத்தலையும் தவிருங்கள்.
  • பிரஸர் பார்ப்பதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது ஓடியாடித் திரியாது அமைதியாக உட்கார்ந்திருங்கள். முதுகு கதிரையில் சாய்ந்திருக்கும் வண்ணம் வசதியாக உட்காரவேண்டும்.
  • சிறுநீர் நிறைந்திருக்கும் வண்ணம் பிரஸர் பார்க்க வேண்டாம். சற்று நேரம் முன்னரே கழித்து சிறுநீர்ப்பையைக் காலியாக வைத்திருங்கள்.
  • பதற்றமின்றி மனஅமைதியுடன் இருப்பதும் அவசியமாகும்.
  • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது(AHA and JNC-7 guidelines) என அமெரிக்க இருதய சங்கம் அறிவித்திருக்கிறது.
  • அளவிடும்போது டொக்டருடனோ அன்றி மற்றவர்களுடனோ உரையாடுவதைத் தவிருங்கள்.


நிற்பதும் இருப்பதுவும் படுப்பதுவும்

பிரஸர் பார்க்கும்போது உட்கார்ந்திருப்பது அவசியம்.

சில வேளைகளில் மருத்துவர் உங்களைப் படுக்க வைத்தும், நிற்க வைத்தும் பிஸைர் பார்ப்பதுண்டு. இது Pழளவரசயட ர்லிழவநளெழைn இருக்கிறதா என அறிவதற்காக ஆகும். நீங்கள் படுத்திருக்கும்போது சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தமானது எழுந்திருக்கும் போது வீழ்ச்சியடைகிறதா என்பதை அறியவே இவ்வாறு அளவிடுவார்கள்.

பீற்றா புளக்கர் (Beta blockers), அல்பா புளக்கர் (Alpha blockers) போன்ற பிரஷர் மருந்துகளால் மட்டுமின்றி, பார்க்கின்சன் நோய், மனவிரக்தி ஆகியவற்றிற்கு கொடுக்கும் சில மருந்துகளாலும் இது ஏற்படலாம்.

வயதான காலங்களிலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் பெண்களிலும் வருவதுண்டு.

படுக்கையிலிருந்து எழும்போது மயக்கம் போல வருவது இதன் அறிகுறியாகும்.

ஒரு முறை பார்த்தால் போதுமா?

ஒரு முறை பார்த்து உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்களை பிரஸர் நோயாளி எனத் தீர்மானத்திற்கு வர மாட்டார்கள்.

ஏனெனில் நேரத்திற்கு நேரம் எங்கள் பிரஸரில் மாற்றங்கள் ஏற்படும். மனப்பதற்றம், மனஅழுத்தம், உணவுவேளை போன்றவற்றாலும் மாறுபடலாம். எனவே சந்தேகம் இருந்தால் உங்களை ஒரு முறையோ பல முறைகளோ மீண்டும் வரச் சொல்லி அளவிட்ட பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வருவார்.

ஒருவருக்கு பிரஸர் இருக்கிறது என முடிவானால் பொதுவாக மாதம் ஒரு முறை உங்களை பரிசோதனைக்காக அழைப்பார்கள். அது நல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் மூன்று மாதமொரு முறை பரிசோதிக்கக் கூடும்.

இப்பொழுது இலக்ரோனிக் பிரஸர்மானிகளையும் சில மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள்.

வீட்டில் அளவிடுதல்

வீட்டுப் பாவனைக்கான அத்தகைய கருவிகள் இப்பொழுது கிடைக்கின்றன. பரவலாக விற்பனையாகிறது. சரியான முறையில் உபயோகித்தால் அவையும் நல்ல பயனுள்ளவையாகும்.

ஆயினும் அதனை நீங்கள் முதல் முதலாக உபயோகிக்க முன்னர் அதனைச் சரியான முறையில் இயக்குவது எப்படி என்பதை உங்கள் மருத்துவரிடம், தாதியிடம், அல்லது விற்பனையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் அளவிடப்படுவதற்கு முன் அவதானிக்க வேண்டியவை

  • அமைதியாக நாற்காலியில் உட்காருங்கள். முதுகு கதிரையில் வசதியாகச் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் நிலத்தில் பதிந்திருக்குமாறு சௌகரியமாக உட்காருங்கள்.
  • இருதயத்தின் உயரத்தில் இருக்குமாறு அருகில் உள்ள மேசையில் உங்கள் கையை வையுங்கள்.
  • பிரஸர்மானியை இயக்கி அது காட்டும் அளவைக் குறித்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறு அளவிடுங்கள்.
  • இரண்டிலும் வேறுபாடு இருந்தால் சராசரியை அந் நேரப் பிரஸராகக் கொள்ளுங்கள்.

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

http://hainallama.blogspot.in/2013/01/blog-post_19.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?

பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.

'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.

தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக  பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.

  • போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
  • ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.
  • நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
  • தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.
  • தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
  • கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
  • குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
  • காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.
  • புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும். இதுவும் இன்னொரு காரணமாகும்.
  • கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
  • சில மருந்துகள் எடுப்பதும்.

பார்வைக் குறைபாடு பெரும்பாலும் காரணமல்ல.


மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.

மருத்துவரை நாட வேண்டியது எப்போது?

இருந்தபோதும் எத்தகைய
  நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.

  • தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
  • தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.

1.    வாந்தியெடுத்தல்
2.
    பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3.
    கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4.
    குழப்பமான மனநிலை
5.
    சமநிலை பாதிப்பு
6.
    கடுமையான காய்ச்சல்

  • தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
  • 3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்


பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.

வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

http://hainallama.blogspot.in/2013/01/blog-post_4.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Fwd: வேலை.நெட்




வேலை.நெட்

Link to வேலை.நெட்

Intel நிறுவனத்தில் Systems Analyst பணிக்கு B.E/B.Tech பட்டதாரிகள் தேவை – Bangalore – March 2014

Posted: 27 Mar 2014 05:54 PM PDT

The post Intel நிறுவனத்தில் Systems Analyst பணிக்கு B.E/B.Tech பட்டதாரிகள் தேவை – Bangalore – March 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Dimension Data நிறுவனத்தில் Field Engineer பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Andhra Pradesh – March 2014

Posted: 27 Mar 2014 05:48 PM PDT

The post Dimension Data நிறுவனத்தில் Field Engineer பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Andhra Pradesh – March 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Microsoft நிறுவனத்தில் Software Development Engineer பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech/MCA/MBA பட்டதாரிகள் தேவை – Bangalore – March 2014

Posted: 27 Mar 2014 05:42 PM PDT

The post Microsoft நிறுவனத்தில் Software Development Engineer பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech/MCA/MBA பட்டதாரிகள் தேவை – Bangalore – March 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
You are subscribed to email updates from வேலை.நெட்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

குழந்தைகளின் வயிற்று வலிகள்

குழந்தைகளின் வயிற்று வலிகள்

மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் அவளோ?

"
டொக்டரட்டை மருந்தெடுத்துக் கொண்டுபோய் ஒருக்கால் குடுத்தால்போதும் பிள்ளைக்கு சுகமாகிவிடும்" என எனக்குப் பாராட்டுத் தருவாள்.

பிரச்சனை பாரதூரமில்லை. இதனைத் தாய்க்கு விளக்கியிருந்தபோதும் அவளால் அவனின் வலியைப் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை.

சின்னப் பையன் 7-8 வயதுதான் இருக்கும். அடிக்கடி வருவது வயிற்று வலிக்காகத்தான். வாயைக் கட்டி இருக்கமாட்டான். வாயைக்கட்டும் வயதில்லைத்தான். இருந்தபோதும் கண்டகண்ட நொறுக்குத் தீனிகளை கண்ட நிண்ட இடங்களில் வாங்கிச் சாப்பிடுவான். வலி தேடி வந்துவிடும்.
அவள் மாத்திரமல்ல வேறு பல பெற்றோரும் வயிற்றுவலிக் குழந்தைகளுடன் வருவதுண்டு. ஏனெனில் குழந்தைகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சனைதான். பெரும்பாலும் உணவு ஒத்துக் கொள்ளாமையாக இருக்கலாம். அல்லது கிருமி தொற்றியிருக்கலாம்.

அடிக்கடி தோன்றும் பிரச்சனை என்றாலும் எல்லாமே ஆபத்தற்றவை என்றும் சொல்ல முடியாது. அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்ற சிக்கலான பிரச்சனைகளும் குழந்தைகளில் வருவதுண்டு.
காரணங்கள் என்ன?
மிக முக்கிய காரணம் கிருமித் தொற்றுத்தான். உணவு அல்லது நீராகாரம் மூலம் கிருமி தொற்றியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். பெரும்பாலும் வாந்தி, வயிற்றோட்டம் வலியுடன் கூடவே ஏற்படும். 'உணவு நஞ்சாதல்' என்ற கலங்கடிக்கும் தலைப்புடன் பத்திரிகைகளில் வெளிவருபவை இவைதான். பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும். ஆனால் சில் பக்றீரியா தொற்றுகளுக்கு அன்ரிபயோடிக் கொடுக்க நேரிடும்.

சில வகை உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலும் வயிற்றுவலி வரலாம். ஒவ்வாமையானது என்றால் தோலில் அரிப்பு, தடிப்பு என்பதாகத்தான் இருக்க வேண்டுமின்றில்லை. உணவுக்கால்வாயின் உட்பகுதியானது ஒவ்வாமையால் தடிக்கும்போது வலி ஏற்படும். சிலவேளை வாந்தியும் கூடவரும்.

எளிதில் செமிபாடடையாத உணவுகளும், அதிகளவு வாயுக்களை வெளியேற்றும் உணவுகளும் சில குழந்தைகளுக்கு வயிறு பொருமுதல், வயிற்று ஊதல், வயிறு அழுவது போன்ற கடாமுடாச் சத்தம்,  ஆகிய அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். சரியாக இதை விளக்க முடியாத குழந்தைகள் இதையும் வலி அல்லது நோ என்றே சொல்லுவார்கள்.

சில பிள்ளைகள் தேவையற்ற பொருட்களை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. சோப், கல்லு, பட்டன், விளையாட்டுப் பொருட்களின் பாகங்கள் என எதையாவது விழுங்கிவிடுவார்கள். இவை பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. சற்றுப் பொறுமையோடு இருந்தால் மறுநாள் மலத்துடன் வெளியேறிவிடும். ஊசி, ஆணி போன்ற கூரான பொருட்கள் மற்றும் பட்டரி போன்றவை பிரச்சனையைக் கொடுக்கலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்றவை தீவிரசிகிச்சை தேவைப்படுபவை. சத்திரசிகிச்சை தாமதமின்றிச் செய்ய நேரிடும்.
குடும்பத்தில் மைக்கிரேன் தலைவலி உள்ளதாயின் குழந்தையின் வயிற்றுவலி (Abdominal Migraine) அதோடு சம்பந்தமானதா என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பொதுவாக இது சற்று வளர்ந்த குழந்தைகளில் காணப்படுகிறது. வயிற்றுவலியுடன் ஓங்காளம், சத்தி, பசியின்மை, இவற்றுடன் கொட்டாவி விடுதல், தூக்கத்தன்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்
மருத்துவரிடம் செல்லு முன்னர் பெற்றோர் அவதானிக்க வேண்டியவை

எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமாகத் தமது பிர்ச்சனையை வெளிப்படுத்துவதில்லை. மிகச் சிறிய குழந்தைகளுக்கு வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. அழுகை மட்டுமே அறிகுறியாக இருக்கும்.

சற்று வளர்ந்த குழந்தைகள் தமக்கு வலிக்கிறதெனச் சொல்லக் கூடும். கடுமையான வலியென்றால் மாத்திரம் சொல்லும் குழந்தைகளும் இருப்பார்கள். சற்று வலி என்றாலே ஆரவாரப்படுத்தும் குழந்தைகளும் இருப்பார்கள். உம்மொன்று முகத்தை வைத்துக் கொண்டு அடங்கிக் கிடப்பதை வைத்துத்தான் சிலரில் உணர முடியும். சுருண்டு படுத்துக்கிடப்பதை வைத்து வலியைக் கண்டுபிடிக்கவும் நேரலாம்.

எவ்வளவு நேரம்?

சாதாரண வலிகள் ஒரு சில மணிநேரத்தில் குணமாகிவிடும். அல்லது படிப்படியாக 24 மணிநேரத்திற்குள் மறைந்துவிடும். அவ்வாறின்றி வலி நீடித்தாலும் வர வரத் தீவிரமானாலும் மருத்துவரைக் காண்பது அவசியம்.
குழந்தையின் உடல்நிலைத் தோற்றம்

வலி என்று சொல்லிவிட்டு சற்று நேரம் விளையாடி ஓரளவு உற்சாகமாக இருந்தால் அது தீவிர நோயாக இருக்காது. மாறாக மிகவும் வருத்தமாகவும் களைப்பாகவும் சோர்ந்தும் இருந்தால் அது அக்கறை எடுக்க வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை.

வலி எங்கே?

வயிற்றில் எங்கு வலிக்கிறது என்பதை அவதானியுங்கள். பொதுவாக வயிறு முழுக்க வலிக்கிறதா? அடி வயிற்றில் வலிக்கிறதா? அல்லது ஒரு பக்கம் மட்டும் வலிக்கிறதா என்பதை அவதானியுங்கள். வலது பக்க அடிவயிற்றில் குத்துவது அப்பன்டிசைடிஸ் ஆக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.

வயிற்றோட்டம்

வயிற்று வலியுடன் வயிற்றோட்டமும் இருந்தால் அது பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்பட்டதாக இருக்கும். தானாகவே குணமாகிவிடும். ஆயினும் மலமானது சளி போல அல்லது இரத்தம் கலந்துபோனால் அது பக்றீரியாத் தொற்றாக இருக்கலாம்.

வாந்தி

இதுவும் ஒரு முக்கிய அறிகுறிகுறி. பொதுவாக ஒரு இரு முறை வாந்தி எடுத்த பின்னர் வலி குறைந்தால் அது உணவு செமிபாட்டின்மையாக இருக்கலாம். தானே குணமாகிவிடும். ஆயினும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண வேண்டும். நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடலாம் என்பதுடன் வயிற்று வலிக்கு வேறு ஏதாவது தீவிர காரணம் இருக்கலாம். அத்துடன் வாந்தியின் நிறத்தையும் அவதானிக்க வேண்டும். மஞ்சளா, பச்சையா கோப்பி கலரா அல்லது இரத்தம் கலந்திருக்கிறதா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கிறதா
காய்ச்சல் இருக்கிறதா என்பதை அவதானிக் வேண்டும், காய்ச்சல் இல்லாமலும் பல ஆபத்தான வயிற்றுக் குத்துகள் வருவதுண்டு.

சிறுநீர்

சிறுநீர் போகும்போது எரிகிறதா, அத்துடன் அதில் ஏதாவது நிற மாற்றம் இருக்கிறதா என்பதும் அவதானிக்க வேண்டியதாகும். சுலபமாக வெளியேறுகிறதா அல்லது முக்கி வெளியேறுகிறதா என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஆண் பிள்ளைகளில்

அடி வயிற்றிற்கு சற்றுக் கீழே விதைப்பையிற்கு மேலே வலியிருந்தால் உடனே கவனிக்க வேண்டும். விதை முறுகுதல் (Testicular torsion) என்பது விதையானது தனக்குள் தானே முறுகுவதாகும்.

உடனடியாகக் கவினிக்காது விட்டால் அதற்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு அந்த விதை செயலிழந்து போகும் அபாயம் உண்டு. பையன்கள் வெட்கப்பட்டு வலிப்பது எங்கே என்பதை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடும். பெற்றோர்கள் அக்கறையோடு விசாரிக்க வேண்டியதாகும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

தேற்றுதலும் ஆறுதலும்

பெற்றோர்களின் தேறுதல் வார்த்தைகளிலும் சற்று ஆறுதலும் எடுக்கவும் பெரும்பாலான வலிகள் தானாகவே மறைந்து விடும். ஆறுதலாகப் படுத்திருப்பதாலும் அல்லது குப்புறப்படுத்திருப்பதாலும் வலி குறையலாம். ஆயினும் கட்டாயப்படுத்த வேண்டாம். எந்த நிலையில் படுத்திருக்க வலி தணிகிறதோ அதையே குழந்தைகள் தாமாகவே தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உணவு

வலியுடன் வாந்தியும் இருந்தால் குழந்தையால் உணவோ நீராகாரமோ எடுப்பது சிரமமாக இருக்கும். உணவு இல்லாமல் ஓரளவு நேரம் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் நீராகாரம் இல்லையேல் உடலில் நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடும். எனவே சிறிது சிறதாகவேனும் ஏதாவது நீராகாரம் கொடுக்க வேண்டும். பசியிருந்து உண்ண விருப்பமும் இருந்தால் உண்பதில் தவறில்லை.

பால், மென்பானங்களை வலியிருக்கும்போது தவிர்ப்பது நல்லது. பால் சமிபாடடைய நேரமெடுப்பதாலும், மென்பானங்களில் காஸ் அதிகம் இருப்பதும் காரணம்.
மருந்துகள்

வலியைத் தணிக்க பரசிற்றமோல் உதவும் அதைத் தவிர வேறு மருந்துகள் கொடுப்பதைத் தவிருங்கள். முக்கியமாக அன்ரிபயோரிக் மருந்துகள், வலிநிவாரணிகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம்.

என்ன நோய் என்பதை நிர்ணயித்த பின்னரே மருத்துவர் சரியான மருந்தைத் தருவார்.

பரிசோதனைகள்

வயிற்று வலியும் ஒரு முறை வாந்தியும் எடுத்த மாணவனை பாடசாலையிலிருந்து நேரடியாக அழைத்து வந்திருந்தார் அவனது தந்தையார். கன்ரீனில் ஏதோ சாப்பிட்டிருந்தான்.

"
எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா" என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தார். உணவுப் பிரச்சனை எனச் சொல்லியும் கேட்வில்லை.

"
இப்ப மருந்து தாறன். பிள்ளையின் வேதனை தணிய நாளைக்கு எடுங்கோ. இரத்தம் சிறுநீரும் சோதியுங்கோ" என பரிசோதிப்பதற்கான சிட்டைகளையும் கொடுத்துவிட்டேன்.

மறுநாள் அவரோ பிள்ளையோ வரவில்லை. பின்னொரு நாளில் சந்தித்தபோது வலி சுகம் என்பதால் அந்தப் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்றார். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். ஆம் அதைத்தானே நான் எதிர்பார்த்தேன்.

சிறுநீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, அல்ரா சவுண்ட் ஸ்கான்,CT Scan எனப் பல பரிசோதனைகள் குழந்தைகளின் வயிற்று வலிக்கான காரணத்தை நிர்ணயிக்கத் தேவைப்படலாம். ஆனால் அவை அவசியமானால் மட்டுமே செய்ய வேண்டியவை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com