Sunday, March 10, 2013

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க......சில வழிகள்!

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க......சில வழிகள்!

 

கரப்பான் பூச்சிக்கு போரிக் ஆசிட் ஒரு நல்ல மருந்து. அது பெரும்பாலும் 30g பாக்கெட்டுகளில் ஃபர்மாசிகளில் கிடைக்கும். அவித்த முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் ( ஒரு பாக்கெட்டுக்கு 2 கரு வீதம் ) எடுத்து 2 ஸ்பூன் சீனியை சேர்த்து நன்கு குழைத்துவிட்டு, மேலும் 2 ஸ்பூன் சீனியை தூவி லேசாக (சீனி கரையாமல்) குழைத்துவிட்டு, சிறு உருண்டைகளாக உருட்டி அடிக்கடி பூச்சி நடமாடும் இடங்களிலும், கபோர்டுகள் உள்ளே, வாஷ்பேஷன் கீழே, ஃபிரிஜ்ஜின் பின்னாலும் கீழேயும் இப்படி போட்டுவைக்கவும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை அதை மாற்றிவிட்டு மீண்டும் செய்துவைக்கலாம்.
அதல்லாமல் கார்பெட்டுக்கு கீழே ஒட்டும் (இரண்டு பக்கமும் பசையுள்ள) ஸ்கோச் கிடைத்தால் வாங்கி ஒரு அட்டையில் ஒட்டி, மேலே லேசாக சீனி தூவிவிட்டு, அதேபோன்ற இடங்களில் வைத்துவிட்டால் வந்து ஒட்டிக்கொள்ளும்.சற்று அதிகமாக ஒட்டியவுடன் அட்டையை எறிந்துவிட்டு மீண்டும் அதேபோல் செய்யலாம். எதுவாக இருந்தாலும் முழுமையாக பூச்சி ஒழியும் வரை செய்து பாருங்கள்!

 

 கரப்பான்பூச்சி தொல்லையை ஒழிக்க போரிக் பவுடரில் (இந்த Boric powder மருந்துக் கடையில் கிடைக்கும். பார்க்க வெள்ளைநிறமாக சோடா மாவு போல் இருக்கும்.)கேரம் போர்ட் பவுடர் (போரிக் ஆசிட் பவுடர்), பால் பவுடர், சிறிது சர்க்கரை இவை மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குலைத்து சமையலறையின் எல்லா மூலைமுடுக்குகளில் வைத்து விடுங்கள்.மேலும் பூச்சிகள் நடமாட்டமுள்ள எல்லா இடங்களிலும் சிறிது சிறிதாக வைத்து விடுங்கள். பூச்சிகள் அதை ஏதோ உணவுப் பொருள் என்று தின்று விட்டு அதன் வலைகளுக்குச் சென்று இறந்து விடும். நீங்கள் வைத்த மாவுப் பொருள் காய்ந்தவுடன் அதை நீக்கி விட்டு மீண்டும் குழைத்து வைக்க வேண்டும். இந்த முறையை வீட்டில் பூச்சிகளின் நடமாட்டம் முற்றிலும் நீங்கும் வரை செய்யுங்கள்.


கரப்பான்பூச்சி தொல்லைக்கு Baygon 24hours Roach killer உபயோகிக்கிறேன். இப்போது தொல்லையே இல்லை. ஒரு பாக்கெட்டில் 6 சின்ன சோப் சைசில் கெப்ச்யூல்கள் இருக்கும். அவற்றை கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வைத்து விட்டால் கரப்பான் பூச்சிகள் அழிந்துவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். சூப்பர்மார்க்கெட்டுகளில் தேடிப்பாருங்கள் கிடைக்கும்

 நன்றி: அருசுவை.காமில் மேற்கண்ட ஆலோசனைகளை அளித்த அன்பு சகோதரிகளுக்கு!..

Engr.Sulthan

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: