Sunday, July 7, 2013

தெரியுமா?

தெரியுமா?

கருணைக் கிழங்கில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட் தான் நாக்கு அரிப்பதற் கான  காரணம்.
******
இந்தியாவில் முதல் முதலாக துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனம்;DAMODAR VALLEY CORPORATION.
******
மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,
******
குளிர்ச்சியான கிரகம் புளுட்டோ.
******
ஹாலி வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது.
******
சுதந்திரத்திற்குப் பின் மொழி வழி அடிப்படையில் அமைந்த முதல் மாநிலம் ஆந்திரா.
******
வங்கக் கடலில் கலக்காத நதி தப்தி.
******
இந்தியாவின் தேசியக் கோடியை உருவாக்கியவர் விஜயவாடாவை சேர்ந்த பிஸ்கலி வெங்கையா என்பவர்.
******
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம்.
******
எந்த ஒரு புத்தகத்தின் இடது பக்க எண்ணும்
  இரட்டைப் படை எண்ணாகத்தான் இருக்கும்.இதற்கு VERSO என்று பெயர்.வலது பக்க எண்கள் ஒற்றைப் படை எண்ணாக இருக்கும்.அதற்கு TECTO என்று பெயர்.
******
மலேரியா என்ற சொல் இத்தாலியிலிருந்து வந்தது.இத்தாலிய மொழியில் மலா என்றால் சதுப்பு நிலம்.ஏரியா என்றால் கெட்ட காற்று.கெட்ட காற்றினால்தான் இக்காய்ச்சல் வருவதாக அவர்கள் நம்பியதால் இப்பெயர் வந்தது.
******
மனிதன் கண்களால் காணும் காட்சிகளில் நூறில் ஒரு பங்குதான் மூளையில் பதிகிறது.
******
ஆங்கில மொழியில் அதிக அர்த்தங்கள் கொண்ட சொல் 'SET' என்பதாகும்..NOUNஆக 58 அர்த்தங்கள்.VERB ஆக 126அர்த்தங்கள்.ADJECTIVE ஆக 10அர்த்தங்கள் உள்ளன.

இந்து மகா சமுத்திரத்தில் மிகப் பெரிய தீவு 'மடகாஸ்கர்'
******
மூக்குக் கண்ணாடி இத்தாலியில் தோன்றியது.
******
யூதர்களின் புனித நூல் 'தோரா'
******
கண்கள் இருந்தும் பார்வை இல்லாத பிராணி 'வௌவால் '
******
ஆப்பிளில் 'மாலிக் அமிலம்'அதிகம் உள்ளது.
******
பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.
******
உலகில் அதிக முட்டையிடும் உயிரினம்,'கரையான்'.
******
சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஷீபுவாங்டி.
******
'ஆன்டிசெப்டிக்'மருத்துவ சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர் 'லூயி பாஸ்டர்'
******
அதிகமான காட்டு வளத்தை 'பச்சைத்தங்கம்' என்று அழைப்பர்.
******
நெருப்புக் கோழியை'ஒட்டகப்பறவை'என்று குறிப்பிடுவார்கள்.
******
மயக்க மருந்தைக் கண்டு பிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்சன்.
******
'கடல்களின் அரசி'என்று அழைக்கப்படும் நாடு ,'இங்கிலாந்து'
******
நாய்க்கு 42 பற்கள்.
******
ஆமைக்குப் பற்கள் கிடையாது.உறுதியான தாடைகள் தான் உண்டு.
******
சீனப் பெரும் சுவரின் நீளம் 3460 கி.மீ.
******
மாலத்தீவில் 1200 தீவுகள் உள்ளன.
******
உலகில் அதிக உபநதிகளைக் கொண்ட ஆறு 'அமேசான்'
******
மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டத்தை'கடலின் ஆபரணங்கள்'என்பர்.
******
பிரெஞ்சு கயானாவுக்கு'பேய்களின் தீவு'என்று பெயர்

எரிமலைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
பெசால்டின்:பூமிக்குக் கீழே ஐந்து கி.மீ.ஆழத்தில் நெருப்புக் குழம்பு ஆறு போல ஓடிக் கொண்டிருக்கும்.பூமிக்கு மேலே வராது.இவ்வகை ஆப்பிரிக்கக் காடுகளில் உண்டு.
அப்சிடியன்;பூமிக்குக் கீழே 12 கி.மீ.ஆழத்தில் இருக்கும்.இதுதான் எரிமலையாய் வெடித்து வெளியில் வரும்.
******
உணவுப் பொருட்களை நீண்ட நேரம் நன்றாக மென்று சாப்பிட்டால் அந்த உணவு மிக சுவையாய் இருப்பதேன்?
நீண்ட நேரம் மெல்லும்போது எச்சில் நிறைய சுரக்கும்.அதில் இருக்கும் அமிலேஸ் (amilase)என்ற சுரப்பியானது(enzyme) உணவில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சாதாரண சர்க்கரையாக மாற்றுகிறது.எனவே உணவு சுவையாய் இருக்கிறது.
******
வீட்டில் ஆப்பம்,கேக் இவை செய்யும்போது சோடா உப்பு போடுவார்கள்.ஏன் தெரியுமா?
சோடா உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் ஆகும்.அடுப்பில் சூடு படுத்தப்படும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைட் வெளிவருகிறது.இந்த வாயுவானது சிறு சிறு குமிழ்களாக அந்த மாவுக்கு இடையில் மாட்டிக் கொள்கிறது.மேலும் சூடாகையில் இந்த வாயுவானது விரிவாகி ஆப்பத்தையோ,கேக்கையோ இலேசானதாகவும் பஞ்சு போல மென்மையானதாகவும் ஆக்குகிறது.பூரி உப்புவது கூட இந்த கார்பன் டை ஆக்சைடினால் தான்.
******
தீக்கோழி(ostrich) இடும் முட்டைதான் பறவை முட்டைகளிலேயே மிகப் பெரியது.ஒரு முட்டையை 12 பேர் சாப்பிடலாம்.ஹம்மிங் பறவை (humming bird)இடும் முட்டைதான் மிகச் சிறியது.ஒரு முத்தின் அளவுதான் இருக்கும்.
******
பறக்கும்போது உறங்கும் பறவை கீகல்.
******
தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு அயர்லாந்து.

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது.அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது.ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது.ஏன்?
            எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு  ஆவி சுற்றியிருக்கும்.தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது.
******
துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது.ஏன்?
             துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை  கொடுக்கிறது.சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது.
******
ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்?
            பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும்.
******
ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப்
  பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும்.ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும்.  காரணம் என்ன?
            
          பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre  ஐ விட பலமானது.அதனால் பேப்பர் அறுபடுவதில்லை.உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.

http://jeyarajanm.blogspot.in/2013/07/5.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: