Monday, February 3, 2014

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பலரும், கடைசிநேர நெருக்கடிகளுக்குள்ளாகி, வாய்ப்பை கோட்டைவிடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில்தான். ஏனெனில், பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது, அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு? என்பன போன்ற விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
செல்லத்தக்க காலம் முடிந்துபோதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால், அவர்களுக்கு கிடைத்த பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன. பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், அதிலிருக்கும் புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால், கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில் அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது, உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.

பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.
தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கைக் கிடைப்பது 100% உறுதியான பிறகுதான், விசா நடைமுறைப் பணிகளைத் துவங்க வேண்டும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. பல நாடுகள், அவற்றின் மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை, குறைந்தபட்சம், படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும். அதன்மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.

அப்படியே நம்பிவிட வேண்டாம்
மாணவர் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். விசா விதிமுறைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனெனில், அவர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகின்றீர்களோ, அந்த நாட்டின் குடியேற்ற மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று, விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.

எந்த ஆலோசகரை நாடலாம்?
வெளிநாட்டு கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்க, ஏராளமான ஆலோசகர்கள் கடைவிரித்து காத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், யாரை நம்புவது? யார், வாங்கும் கட்டணத்திற்கு முறையாக சேவை செய்கிறார்கள் என்பதை எப்படி அறிவது? ஒரு ஆலோசகர் நல்லவரா என்பதை, அவரால் ஏற்கனவே பயன்பெற்ற நபர்கள் சொல்வதை வைத்தும், அவரின் தொழில்ரீதியிலான சாதனை மற்றும் அனுபவத்தை வைத்தும் நம்பலாம்.
மேலும், நீங்கள் படிக்கச்செல்லும் கல்வி நிறுவனத்தின் இணையதளம் சென்றால், அதிலேயே, அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களின் விபரங்கள் இருக்கும். அதன்மூலம் பயன்பெறலாம். தொலைக்காட்சியில் பேட்டி வருகிறது என்பதற்காகவோ, அதிகளவில் விளம்பரங்கள் தருகிறார்கள் என்பதற்கோ, யாரையும் நம்பிவிட வேண்டாம்.

நீங்களே பொறுப்பு
வெளிநாட்டுக் கல்விக்கென்று நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் கூறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் நீங்களே பொறுப்பு. அதில் எந்த சிறு தவறு நேர்ந்தாலும், உங்களின் பொன்னான வாய்ப்பு பறிபோய்விடும்.
எனவே, அந்த செயலை மேற்கொள்ளும் முன்பாக, சரியான நபர்களிடம் ஆலோசனைக் கேட்டு, நுணுக்கமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்தல் வேண்டும். இதற்கு நீங்களே 100% பொறுப்பு.

விசா விபரங்கள்
பல நாடுகளில், மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.

சரி பார்க்கவும்
விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழைகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும். ஏதேனும் ஒரு காரணத்திற்காக, நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
பல நாடுகள் multiple - entry student விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால் சில நாடுகள், single - entry விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

போர்ட் ஆப் என்ட்ரி
நீங்கள் முதன்முதலில் ஒரு நாட்டிற்கு படிக்கச் செல்கையில், அந்நாட்டில் எந்த விமான நிலையத்தில் முதலில் தரையிறங்குகிறீர்களோ, அந்த இடம்தான் Port of entry எனப்படும். அந்த இடத்தில்தான் immigration மற்றும் customs நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை
பல்கலையிடமிருந்து, பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்
அசல் கல்விச் சான்றிதழ்கள்(அது ஆங்கிலத்தில் இல்லையெனில், மொழிபெயர்ப்பு தேவை)
அசல் தேர்வு முடிவுகள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்
வங்கிக் கடன்
தங்குமிடம்
அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
உதவித்தொகை கடிதம்
புகைப்படங்கள்

விசா கட்டணங்கள்

http://pettagum.blogspot.in/2012/11/blog-post_16.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: