Saturday, March 1, 2014

Fwd: [TMMK] பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய நற்செயல்கள்.




பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய நற்செயல்கள்.



ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் 'கேளுங்கள்' என்றார்கள்.

 

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

 

· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

 

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

 

· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

 

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

 

· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

 

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

 

· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

 

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

 

· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

 

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

 

· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

 

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

 

· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

 

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

 

· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

 

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

 

· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

 

· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

 

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

 

· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

 

12. பாவங்கள் குறைய வழி என்ன ?

 

· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

 

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

 

· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

 

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?

 

· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

 

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

 

· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

 

16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

 

· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

 

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

 

· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

 

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

 

· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

 

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

 

· கண்ணீர், பலஹீனம், நோய்

 

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?

 

· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

 

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

 

· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

 

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

 

· கெட்ட குணம் – கஞ்சத்தனம்

 

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

 

· நற்குணம் – பொறுமை – பணிவு

 

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

 

· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

 

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )



--
Hussain Ghani
President
TMMK,
Central Region,
Riyadh - Saudi Arabia.
+966 502929802.


------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! அல் குர்ஆன் 3:08.
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tmmk+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tmmk@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tmmk.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: