Tuesday, February 26, 2013

கால் ஆணி

கால் ஆணி

மூலிகை பயன்படுத்தும் முன்

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் "கால் ஆணி ". காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும் , செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்,  சென்னையில் இருக்கும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நம் வலைப்பூ நண்பர் விஸ்வநாதன் என்பவர் கடந்த மாதம் தன் காலில் " கால் ஆணி "  இருப்பதாகவும் மூன்று மாதமாக பல ஆங்கில மற்றும் சித்த மருந்து எடுத்தும் குணமாகவில்லை என்று கூறி ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறு கூறினார், இயற்கை மேல் முழு நம்பிக்கை உள்ள அவருக்காக அகத்தியரின் குணபாடத்தில் உள்ள ஒரு மூலிகையை கூறி இதை தொடர்ந்து 9 நாட்கள் பயன்படுத்துங்கள் உடனடியாக மாற்றம் இருக்கும் என்று கூறினோம். மருந்து பயன்படுத்தும் முன் "கால் ஆணி" உள்ளதை புகைப்படம் எடுத்து பின் மருந்து பயன்படுத்துங்கள் என்று தெரியப்படுத்தி இருந்தோம், சரியாக 6 நாட்கள் கழித்து நண்பரிடம் இருந்து மெயில் வந்தது அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.

அன்பு நண்பருக்கு,
முதலில் நன்றி.
தாங்கள் கூறிய மூலிகை மருந்தை எனது வலது காலில் கடைசி இரு விரல்களுக்குமிடையில் மூன்று மாதங்களாக இருந்து வந்த "கால் ஆணி" க்கு காலையில் மட்டும் போட்டு வந்தேன். அதிசயம். ஆனால் ஐந்து நாட்கள் போட்டவுடனேயே, வலியும் குறைந்து, தற்போது ,நன்கு நடக்கவும் முடிகின்றது. இதற்கு முன்பாக பல மருந்துகள் உபயோகித்தும் பலன் கிடைக்கவில்லை. தற்போது
நன்கு குணமடைந்து விட்டேன்.

மிக்க நன்றி ___________ அவர்களுக்கு. தங்கள் பயன் கருதா தொண்டு வாழ்க.

என்றும் நட்புடன்,
விஸ்வநாதன்
சென்னை.

இவர் தெரிவித்த அன்பையும் நன்றியையும் அப்படியே எம் குருநாதரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன், இந்த மருந்தை கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள் அவர்கள் எழுதி வைத்தை சொல்லும் இந்த சாதாரண மனிதனுக்கு எந்த பெருமையும் தேவையில்லை உங்கள் அன்பு மட்டும் போதும். உண்மையான முழு நம்பிக்கையோடு "கால் ஆணி" உள்ளவர்கள் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு
இதற்கான மருந்து இமெயிலில் தெரியப்படுத்தப்படும். மருந்து தெரியப்படுத்தும் முன் பல முறை நன்றி சொல்லும் நபர்கள் குணமடைந்த பின் ஒரு இமெயில் கூட அனுப்பாதது தான் நம் தளத்தில் இருந்து பல அரிய நோய்களுக்கு மருந்து தெரிவிக்க இயலாமல் போகிறது. மருத்துவ உலகமே மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல நோய்களுக்கு ஏற்கனவே சித்தர்கள் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,  நம் தளத்தின் மூலம் சிலருக்கு மருந்து தெரிவிக்கப்பட்டு முழுமையான குணம் அடைந்துள்ளனர் விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும்.

அன்பருக்கு ,

 

"கால் ஆணி " - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் "குப்பைமேனி " தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும்

 

மருந்து கிடைத்தற்காக இறைவா உனக்கு நன்றி என்று சொல்லி விட்டு தொடங்குங்கள்.

 

15 இலைகள் வரை எடுத்து நன்றாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் பூசுங்கள் , 9 நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்.

பயன்படுத்திய பின் உங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கை உணவு உலகம்.

http://naturalfoodworld.wordpress.com

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: