Sunday, December 30, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 25

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 25

·         மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.

·         200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.

          நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.

  ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.

  மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

  நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.

  நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

  ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

  வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

  மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

  கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

  ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

  பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

  பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

  நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

  ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.

  ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

  ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

  புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

  காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.

  பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.

  உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.

  கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

  கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.

நன்றி-தேனி.எஸ்.மாரியப்பன்

Engr.Sulthan

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: